கொவிட் -19 குறித்து அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் - நாமல்

Published By: Digital Desk 3

26 Feb, 2020 | 01:32 PM
image

கொவிட் -19 குறித்து அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் -19 வைரஸ் ஏற்கனவே பல நாடுகளுக்கு பரவியுள்ளது. இது உலக சுகாதார மற்றும் பொருளாதார துறைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் இலங்கை பாராட்டுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுவதால் மேலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நமல் தெரிவித்துள்ளார்.

"சீனாவிலிருந்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் சீன சுற்றுலா பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ள நிலையில், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இலங்கை ஐரோப்பிய சந்தைகளை சார்ந்துள்ளது, இப்போது அதுவும் குறிப்பிட்ட அளவிற்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது, "என்றார்.

உலகளவில் வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வலுப்படுத்த நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். உலகப் பொருளாதாரத்தை  எவ்வாறு நன்கு பாதுகாக்க முடியும் என்ற வழி முறைகளை கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நன்கு குணப்படுத்தப்பட்டு கடந்த வாரம் லைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நோயாளியே கொரோனா வைரஸின் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இலங்கை இதுவரை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான மூன்று பேர் வைரஸ் தொற்றுக்கள் இதுவரை ஐ.டி.எச் மற்றும் உள்ளூர் வைத்தியசாலையில் பதிவாகியிருநு்த நிலையில் குறித்த மூவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33