தென்கொரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவில் பாதுகாப்பு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள அமெரிக்கா இராணுவ வீரர் ஒருவரின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து அவர் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிசெய்த வைத்தியர்கள் அவருக்கு உடனடியாக தீவிர வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் டேகுவுக்கு வடக்கே 30 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் கொரியாவில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Help : The New York Times
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM