(ஆர்.விதுஷா)
ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு உள்ளடங்கலாக அனைத்து தரப்பிலும் குற்றச்சாட்டுக்களற்ற சிறந்த அரசில் வாதிகள் இருக்கின்றனர். அத்தகையோரை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நாட்டு மக்களின் கடமையாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் வியத்மக அமைப்பிற்கிடையிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் மஹிந்த தரப்பினருக்கு மீண்டும் பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஜனாதிபதியால் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை சரிவர நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,
எயார் பஸ் கொள்வனவின் போது இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான தகவல்களை ஆதாரபூர்வமாக நாம் வெளிப்படுத்தியிருந்தோம்.
இது தொடர்டபில் ஆராய்ந்து பார்க்கும் போது கடன் அடிப்படையிலேயே கொள்வனவு இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே , ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக நாட்டு மக்களுடைய பணமே அனாவசியமான முறையில் விரயமாக்கப்பட்டுள்ளது.
மத்தியவங்கி பிணை முறி கொள்வனவின்போது இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் தடயவியல் அறிக்கையின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மஹிந்த அரசாங்கத்தில் 10 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி இடம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியே இவ்வாறாக அநாவசியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆளும், எதிர்த்தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட டீல் காரர்கள் உள்ளனர். ஆயினும் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அவ்வாறான மோசடி க்காரர்கள் அல்ல . மாறாக மோசடி குற்றச்சாட்டுக்களற்ற பாராளுன்ற உறுப்பினர்களும் உள்ளனர் ஆகவே , நாட்டு மக்கள் தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது அவசியமானதாகும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM