மனித உரிமை மீறல்களுக்குத் தேசிய இறைமை ஒரு போர்வையாக இருக்க முடியாது. மனித உரிமைகளை மேம்படுத்துதல் நாடுகளையும் சமூகங்களையும் வலுப்படுத்துகின்றது அதுவே இறைமையையும் வலுப்படுத்து கின்றது. என ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரனியோ கட்டரஸ், ஜெனிவாவில் தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகுமெனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
தேசிய இறைமை என்ற போர்வையின் கீழ் மனித உரிமை மீறல்கள் அவ்வப்போது உலக அரங்கில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனை நமது நாட்டிலுள்ள இன வாத அமைப்புகளும் கையில் எடுத்துள்ளன. சிறுபான்மை சமூகங்களைத்திட்டமிட்ட முறையில் நசுக்கி ஒடுக்கவேண்டும் என்ற எண்ண வெளிப்பாடு உத்வேகம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐ.நா.மன்றில் இந்த குரல் முன்வைக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
அங்கு அவர் முன்வைத்துள்ள மற்றொரு கருத்தும் முக்கியத்துவம் பெறுகின்றது அதாவது, உலக அரங்கில் பதகளிப்புகளை தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வெளியை அதிகரிப்பதன் மூலம் அனுகூலங்களைப்பெற முயற்சிக்கப்படுகின்றது.
வக்கிரமான அரசியல் கணக்கீடு இறுகப் பற்றிப்பிடித்துள்ளது. வாக்குகளைப் பெருக்குவதற்காக மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளமை நமது நாட்டிலுள்ள சமகால அரசியல் நிலை மையைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்துள்ளது.
எனவே நம் நாட்டிலுள்ள சமகால அரசியல் தளத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நாம், வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சூட்சுமங்களையும், காய்நகர்த்தல்களையும் தெளிவுபடத் தெரிந்துகொள்ளவேண்டும்.
அதிகாரம் நம்மிடம் உள்ளது எனவே நீங்கள் உங்களுக்குத் தேவையான உதவிகள், தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் எமக்கு வாக்களிப்பதே நல்லது என்ற கோதாவில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் தருணமாகச் சமகாலம் இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் சிறுபான்மை கட்சிகளைப் பிரித்தாளும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் அறிகுறிகளும் தென்படுகின்றன.
எனவே, இவ்விடயங்களில் நாம் அவதானமாக இருந்து எமது மனித உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதுடன் சமூகங்களின் இருப்பை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். அதற்கு நமக்கு பெரும் துணையாக இருப்பது நமது ஒற்றுமை என்பதை நினைவில் கொண்டு நாம் ஓரணியாகச் செயற்பட திடசங்கற்பம் கொள்ளவேண்டும் - என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM