சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், முய் தாய் (Muay Thai) எனும் குத்துச்சண்டைப் போட்டியின் போது மரணமடைந்தமை இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் 32 வயதான பிரதீப் சுப்ரமணியம் கலந்துகொண்டார். இந்நிலையில், குறித்த போட்டியில் 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார்.
போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற வைத்தியப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர்.
அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, பிரதீப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த போட்டியின் போது பிரதீப் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
விசாரணையின்போது, குத்துச்சண்டைப் போட்டியின்போது பதிவான காணொளிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரின் உடல் கட்டமைப்புச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான 32 வயதுடைய பிரதீப் இதயச் செயலிழப்பால் உயிரிழந்ததாக மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM