திருகோணமலை-கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இடைபுகு மனுதாரரின் விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் (25) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னியா வெந்நீரூற்று வழக்கு இடைபுகு புது மனுதாரரை வழக்கில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதுபற்றியே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் மற்றும் முதலாம் இரண்டாம் மனுதாரர் சார்பில் அரச சட்டத்தரணி மற்றும் இடை புகு மனுதாரர் சார்பில் அதாவது விகாரையின் விகாராதிபதி சார்பில் சட்டத்தரணி ஏ.எஸ்.எம்.ரபீஸ் உட்பட சிரேனிய புஞ்சிநிலமே ஆஜராகியிருந்தனர்.
குறித்த வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச தேரரினால் முன் வைக்கப்பட்ட ஆவணங்களில் குறித்து கன்னியா வெந்நீரூற்று தொடர்பிலான எந்த ஒரு உரிமைக்கான ஆவணங்களையும் முன்வைக்காத படியினாலும், முதலாவது எதிர் மனுதாரரான தொல்பொருள் திணைக்களம் மற்றும் இரண்டாவது மனுதாரரான திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்திற்கு உரிமையிருப்பதாகவோ அல்லது இருப்பதாகவோ அல்லது வில்கம் விகாரை விகாராதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது பற்றியோ எந்தவிதமான ஆவணங்களையும் முன்வைக்கவில்லை.
எனவே குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மனுதாரரைக் குறித்த வழக்கில் ஒரு கட்சிக் காரராக ஏற்றுக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கப்பட்டது.
குறித்த வழக்கானது எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM