இந்திய தலைநகர் புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். வர்த்தக நிலையங்களும் வீடுகளும்எரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் திருத்தப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களிற்கும் அதனை ஆதரிப்பவர்களிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாகவே உயிரிழப்புகளும் காயங்களும் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமையும் இடம்பெற்றுள்ளது.
புதுடில்லியின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் சூட்டு காயங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டில்சால் கார்டன் என்ற பகுதியில் உள்ள குரு தேஸ்பகதூர்ர் மருத்துவமனையில் காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றிரவு காயமடைந்த 57 பேர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் இதன் காரணமாக சரியான எண்ணிக்கiயை மதிப்பிட முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளன.
சிலருக்கு துப்பாக்கி தாக்குதல் காயங்களும் காவல்துறையினரின் தாக்குதல்களினால் ஏற்பட்ட காயங்களும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் ஒருவர் எரிகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார் என குறிப்பிட்டுள்ளன.
இது வரை காவல்துறையை சேர்ந்த ஒருவர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்,நால்வர் துப்பாக்கி சூட்டு காயங்கள்காயங்களினால் மரணித்துள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனது மகன் நீர்சுத்திரிகரிப்பு சாதனங்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்,எனது மகன் வேலைக்கு சென்று கொண்டிருந்த வேளை சுமார் 10 முதல் 15 நபர்கள் அப்பகுதிக்கு வந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என காலில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 வயது இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீடுகளும் கடைகளும் எரியும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM