கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை நெளுக்குளம் பகுதியிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் அழகேஸ்வரன் வயது 43 மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது இவ்விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரின் உடல் தகுதிகள் எவ்விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளாமல் தவறான முறையில் மயக்க மருந்து ஏற்பட்டதன் பின்னர் சற்று நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வைத்தியர்கள் மயக்கமருந்தை கட்டுப்படுத்தும் இன்னொரு மருந்தையும் அவர் மீது ஏற்றியபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த பத்து நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உறவினர்கள் வைத்தியர்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறு அவரது உடல் தகுதி நிலைகள் பரிசோதனை மேற்கொள்ளாமல் மயக்க மருந்து ஏற்றப்பட்டதன் விளைவாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிர சிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளதுடன் தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியர்களின் கவனயீனமே காரணம் என்று மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
குறித்த குடும்பஸ்தர் நெளுக்குளம் பகுதியிலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றில் மதபோதகராகவும் கடமையாற்றி வந்திருந்தார் என்பதுடன் ஆலயத்திற்குச் செல்ல முற்பட்டபோது வீட்டிற்கு அருகில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விடயம் குறித்து வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமாரை தொடர்பு வினவியபோது,
குறித்த மதபோதகரின் உயிரிழப்பு தொடர்பாக எதுவிதமான முறைப்பாடுகளும் எனக்கு வழங்கப்படவில்லை. முறைப்பாடு வழங்கப்பட்டால் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளமுடியும் என தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM