தென் சூடானின் முதலாவது உப ஜனாதிபதியாக முன்னாள் கிளர்ச்சித் தலைவர் ரெயிக் மசார் நேற்று முன்தினம் சனிக்கிழமை பதவியேற்றார்.
இதன் மூலம் அவர் அரசாங்கத்துடன் உத்தியோகபூர்வமாக இணைந்து செயற்படவுள்ளார். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சியின் அங்கமாகவே அவரது பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இது தொடர்பில் தென்சூடான் ஜனாதிபதி சல்வா கிர் தெரிவிக்கையில், இது போருக்கான உத்தியோகபூர்வ முடிவாகும் என்று கூறினார். 2018ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதையடுத்து பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஐக்கிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியிலிருந்து சல்வா கிர் இரு தடவைகள் பின்வாங்க நேர்ந்தது. இந்நிலையில் ஒரு வருட காலத்திற்கும் அதிகமான தாமதத்தையடுத்தே தற்போது ஐக்கிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.
புதிதாக முதலாவது உப ஜனாதிபதியாக பதவியேற்ற கிளர்ச்சித் தலைவர் 36 மாதங்களுக்கு அரசாங்கத்தில் சேவையாற்றவுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிக் குழுக்களைச் சேர்ந்த ஏனைய 4 உப ஜனாதிபதிகள் அரசாங்கத்தின் 35 அமைச்சர்களில் அங்கத்துவம் வகிக்கவுள்ளனர்.
தென் சூடானில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் 400,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM