இந்திய அணிக்கெதிரான 2 ஒருநாள் போட்டி களிலும் சிம்பாப்வே அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிம்பாப்வே வீரர்களை கைது செய்ய வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தில் இருந்து சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடு வது இரண்டு அணிகளே.
ஒன்று தென்னாபிரிக்கா மற்றொன்று சிம்பாப்வே. தென்னாபிரிக்க அணி எப்பொழுதுமே வலுவான அணியாக இருந்து வருகிறது. ஆனால், சிம்பாப்வே அணி அப்படியல்ல. தற்போது அந்த அணி பலவீனமாக உள்ளது.
இந்திய அணி தற்போது சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் ஒருநாள் தொடரை சிம்பாப்வே அணி பரிதாபகரமாக தோற்றது.
இதனால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள் மைதானத்திற்கு கொண்டு வந்த பதாகைகள் மூலம் கடுமையான ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த பதாகையில் சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களை கட்டாயம் கைது செய்ய வேண்டும். அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் ‘‘பேரழிவிற்கு எங்களால் ஆதரவு கொடுக்க முடியாது’’ என்றும் ‘‘உங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு என்னவொரு அவமானம்?’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM