இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டப்லினில் ஆரம்பமாகியது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை அணி அயர்லாந்து அணியுடன் 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றது.
அதன் முதல் போட்டி இன்று ஆரம்பமாகியது. இரண்டாவது போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து இலங்கை அணி இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றது.
இந்தத் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணி கடைசியாக விளையாடிய நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்திருந்த சிறிவர்தன நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற் றும் ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணித் தலைவராக இயோன் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், கிறிஸ் ஜோர்டான், ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடீல் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM