கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜப்பானிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட “டயமண்ட் பிரின்ஸஸ்” கப்பலில் இருந்த கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பயணி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர் ஜப்பானை சேர்ந்த அவர் 80 வயதுடையவர் என்றும் மேலும் சில நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தர் என அவர் குறித்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த நபர் டயமண்ட் பிரின்ஸஸ் மீட்கப்பட்டு உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்போது குறித்த நபர் மரணத்திற்கான காரணம் நிமோனியா என அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்த இறப்புடன் ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மூன்று பேர் உயிரிழந்ததுடன் குறித்த டயமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் இதுவரை 600 பேர் வரை குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்தோடு குறித்த கப்பலுக்கு வெளியில் இதுவரை 130 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM