இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன - சரத் வீரசேகர 

Published By: Vishnu

23 Feb, 2020 | 02:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜெனிவா பிரேரணையில் இருந்து  அரசாங்கம் விலகும் தீர்மானத்தை தொடர்ந்து, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம் பெயர் அமைப்புக்கள் மிக தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளை  பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையின் உள்ளக  விவகாரத்தினை  நல்லாட்சி அரசாங்கம் தங்களின் அரசியல் தேவைகளுக்காக சர்வதேசத்தின்  மட்டத்தில்  கொண்டு சென்றது. 

இதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பினை   வழங்கியது. கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுகளுக்கு தீர்வு  காண்பதற்கு    கடந்த அரசாங்கத்தில்  எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவில்லை. மாறாக புலம் பெயர் விடுதலை புலிகளின் அமைப்புக்களின் நோக்கங்களை  சர்வதேச  நாடுகளின் ஒத்துழைப்புடன்  நிறைவேற்றிக் கொள்ளவே  முயற்சித்தார்கள்.    

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை தொடர்ந்து  இலங்கையை  சர்வதேச  குற்றவியல் நீதிமன்றில்  நிறுத்தும் நடவடிக்கைகளை  புலம் பெயர் அமைப்புக்கள் மிக தீவிரமாக முன்னெடுத்து வருவதை  அவதானிக்க முடிகின்றது.  இலங்கையை  சர்வதேச நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தும் நோக்கிலேயே   காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.  

காணாமல் போனோர் அலுவலகத்தில்  செயற்பாடுகள் அனைத்தும்     ஆரம்பத்தில் இருந்து   ஒர தரப்பினருக்கு  சாதகானது என்பதை   குறிப்பிட்டோம். ஆகவே இலங்கையை   சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்  நிறுத்தும்  நடவடிக்கைகள்  ஏற்கெனவே   முன்னெடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26