நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில், கூட்டு தபால் தொழிற்சங்கங்கங்கள் ஒன்றியத்துக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் ஊழியர்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தபால் திணைக்கள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய அதிகாரிகள் தவறி விட்டனர்.
பிரதமர் செயலாளரின் தலைமையில் நடைபெறும் இன்றைய கலந்துரையாடலில் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு எவ்வாறான தீர்வை வழங்க முடியும் என்பது தொடர்பாக கலந்துரையாட உள்ளோம்.
இதேவேளை நாட்டின் பிரதான பல பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் இன்று பகல் 12 மணிவரை தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும் தபால் சேவையில் கால தாமதங்கள் ஏற்படும்.
எனினும் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM