கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து யாரும் உரிமை கோர முடியாது. கச்சதீவு என்பது இரண்டு நாடுகளுக்கு இடையில் தீர்க்கப்பட்ட விவகாரமாகும். அதனை மீண்டும் கிளற முடியாது. இந்திய உச்சநீதிமன்றம் அது தொடர்பில் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அந்தவகையில் யாரும் கச்சத்தீவை கேட் க முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்டகாலமாக கோரிவருகின்றார். ஆனால் அது முடியாத காரியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்
பதில் கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்டகாலமாக கோரிவருகின்றார். அது முடிந்துபோன விடயமாகும். அதனை மீண்டும் இலங்கையிடமிருந்து யாரும் உரிமை கோர முடியாது. கச்சதீவு என்பது இரண்டு நாடுகளுக்கு இடையில் தீர்க்கப்பட்ட விடயமாகும். அதனை மீண்டும் கிளற முடியாது. இந்திய உச்சநீதிமன்றம் அது தொடர்பில் தெ ளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அந்தவகையில் யாரும் கச்சத்தீவை கேட் க முடியாது. இது மீண்டும் கிளறப்பட முடியாத வகையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒருவிடயமாகும் என்றார்.
நேற்று முன்தினம் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்திருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM