யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேகநபர்கள் 14 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரையில் பணத்தைப்பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்றைய தினம் தொலைபேசியில் வாயிலாகத் தொடர்பு கொண்ட நபர்கள் தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வருகை தரவுள்ளோம்.
அதற்கான செலவீன பணத்தினை "ஈசி கேஸ்" மூலம் அனுப்பி வையுங்கள் எனக் கோரியுள்ளனர்.
அதனை அடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாவையும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபா பணத்தினையும் "ஈசி கேஸ்" மூலம் அனுப்பியுள்ளனர்.
ஏனைய கிராம சேவையாளர்கள் நடப்பதை சுதாகரித்துக்கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM