ஜனாதிபதி செயலக அதிகாரியென அறிமுகப்படுத்தி கிராம சேவகர்களிடம் பண மோசடி

Published By: Daya

21 Feb, 2020 | 04:03 PM
image

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேகநபர்கள் 14 ஆயிரம் ரூபா முதல்  25 ஆயிரம் ரூபா வரையில் பணத்தைப்பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்றைய தினம்  தொலைபேசியில் வாயிலாகத் தொடர்பு கொண்ட நபர்கள் தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வருகை தரவுள்ளோம்.  

அதற்கான செலவீன பணத்தினை "ஈசி கேஸ்" மூலம் அனுப்பி வையுங்கள் எனக் கோரியுள்ளனர். 

அதனை அடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாவையும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபா பணத்தினையும் "ஈசி கேஸ்" மூலம் அனுப்பியுள்ளனர். 


ஏனைய கிராம சேவையாளர்கள் நடப்பதை சுதாகரித்துக்கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40