அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தமிழ் , சிங்கள புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தமது ஆதரவாளர்கள்மூலம் அதிகரிப்பதற்கான சதித்திட்டத்தை ஐ.தே.கவும் ஜே.வி.பியும் முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டிய அபிவிருத்தி வஙகி மற்றும் கடன் வசதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முழுமையான ஆதரவினை வழங்கினோம்.
ஆனால் இன்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களுக்கு அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்தி நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கினோம். ஆளும் தரப்பினருக்கு அன்று 44 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். என்றாலும் அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தோம்.
ஆனால் இன்று எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இவர்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். ஜனாதிபதியின் மக்கள் நலன் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்போமென எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்ற போதிலும் கணக்கு வாக்கறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவரின் இரட்டை கொள்கை அம்பலமாகியுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM