எதிர் கட்சியினர் கணக்கு வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க மறுத்ததால் இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றுக் கொண்டோம் ; தினேஸ்

Published By: Digital Desk 4

20 Feb, 2020 | 07:09 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தின் கணக்கு வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்க மறுத்ததால்  அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பிக்காது இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றுக்கொண்டது.

அத்துடன் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் கணக்கு வாக்கெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்ததால் இத்தீர்மானத்தை எடுத்ததாக சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில்  இன்று  காலை 9.30 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகளின்  பின்னர் கட்சித் தலைவர் கூட்டத்துக்காக 10.30 மணியளவில் சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

மீண்டும் 11.30 மணியளவில் சபை கூடியதும் பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுவதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அறிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, இன்றைய ஒழுங்குப்பத்திரத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் கணக்கு வாக்கெடுப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதென்றார்.

அதற்கு பதிலளித்த சபை முதல்வர், அரசாங்கம் தீர்மானித்தால்தான் எந்தவொரு பிரேரணையையும் முன்வைக்க முடியும். அதன் பின்னர்தான் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். நிதி அமைச்சரால்  கணக்கு வாக்கெடுப்பு இன்று சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்து.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் செலுத்தப்படாதுள்ள நிதியை பெற்றுக்கொள்ளும் முகமாக கடன் எல்லையை அதிகரிக்கவே அரசாங்கம் கணக்கு வாக்கெடுப்பை கொண்டுவர தீர்மானித்தது. இதற்கு அமைச்சரவையிலும் அனுமதியளிக்கப்பட்டுதுள்ளது. உரம் பெற்றமைக்காகவும், மருந்துக் கொள்வனவுக்காகவும் டென்டர்களுக்காகவும் நிதியை செலுத்த வேண்டியுள்ளது. மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொண்டுள்ள கடன்களும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அவற்றை செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

சட்ட மாஅதிபர் இந்த யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முடியுமென கூறியதால் நாம் இதனை சமர்ப்பிக்க தீர்மானித்தோம். என்றாலும், இதற்கு எதிர்ப்பை வெளியிட எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியாக எம்மால் செயற்பட முடியாத தீர்மானத்தை இவர்கள் எடுத்துள்ளர். எதிர்கட்சியினர் பெற்ற கடனையே நாம் செலுத்த அனுமதியை கோருகின்றோம். என்றாலும் கட்சித் தலைவர் கூட்டத்தில் இவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்காமல் வாபஸ் பெற்றுக்கொள்கின்றோம் என்றார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33