அமெரிக்காவின் வோல்ட்ஸ்ரீட் ஜேர்னலின் மூன்று செய்தியாளர்களை சீனா தனது நாட்டிலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா என்ற தலைப்பில் வோல்ட்ஸ்ரீட் ஜேர்னலில் கட்டுரையொன்று வெளியானதை தொடர்ந்தே சீனா செய்தியாளர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.
வோல்ட் ஸ்ரீட் ஜேர்னலின் ஆசிரியர்கள் இவ்வாறான இனரீதியிலான பாகுபாட்டை காண்பிக்கும் தலைப்பை பயன்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் இதுவரையில் வோல்ட்ஸ்ரீட் ஜேர்னல் கவலை தரும் விதத்தில் அதன் கடமைகளை நிறைவேற்றுவதை தவிர்த்து வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வோல்ட் ஸ்ரீட் ஜேர்னல் இதுவரை எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அந்த கட்டுரையை எழுதியவர்களிற்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுக்கப்போவதாக அறிவிக்கவில்லை இதனால் அதன் செய்தியாளர்களின் ஊடக அனுமதி இரத்து செய்யப்படுகின்றது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நடவடிக்கை கடுமையான முன்னர் ஒருபோதும் நடந்திராதது என வோல்ட் ஸ்ரீட் ஜேர்னலின் தலைமை ஆசிரியர் மட் மரே தெரிவித்துள்ளார்.
சீனா தனது இந்த நடவடிக்கைகளை கைவிடச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாற்றுக்கருத்தை முன்வைப்பதே சரியான நடவடிக்கை கருத்துசுதந்திரத்தை முடக்குவது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா அனுமதியை இரத்துச்செய்துள்ள செய்தியாளர்களில் ஒருவர் தற்போது வுகானில் தனது உயிரை பணயம் வைத்து செயற்பட்டு அங்குள்ள நிலைமையை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM