தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாயிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் தென்கொரியாவில் உயிரிழந்துள்ளமை இது முதலாவது சந்தர்ப்பமாகும்.
தென் கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி இன்றைய தினம் கொரோனா தொடர்பான 22 புதிய வழக்குளும் இதுவரை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் தென்கொரியாவில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் தொகையானது 104 ஆக உயர்வடைந்துள்ளது.
தென்கொரியாவில் உயிரிழப்பு இடம்பெற்ற சியோங்டோவில் அமைந்துள்ள டேனம் வைத்தியசாலையில் நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடம் வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் குறித்த சுற்றுக் சூழல் பகுதியில் கிருமி நீக்கம் செய்யும் பணிகளும் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
photo credit : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM