கொலை வழக்கு சந்தேக நபர்கள் விடுதலை

Published By: Raam

16 Jun, 2016 | 07:27 AM
image

ஏறாவூர் சதாம் குசைன் கிராமத்தைச் சேர்ந்த கச்சிமுகமது வகாப்தீன் என்பவருக்கு காயம் விளைவிக்கும் நோக்குடன் ஒன்றுகூடியமை அக்காயத்தின் விளைவாக மரணம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரச தரப்பினர் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறியதால் எதிரிகளை விடுதலை செய்வதாக இவ்வழக்கை விசாரணை செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார். எதிரிகளின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் ஆஜரானார்.

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக கயாத்துக்குட்டி அலி முகமது, கயாத்துக்குட்டி மாபீர், கயாத்துக்குட்டி ஜெயினுவஸ்தீன், அப்துல் ஹக் ஜலால்டீன், முகம்மதுலெவ்வை பாத்துமுத்து, முகமது ஜிப்றி, அப்துல் ஹலால் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடுநர் சார்பாக இறந்தவரின் மனைவியான காசிமாலெவ்வை முஸ்ஸலின், ஜக்குறியா பௌஸ், ஆதம் லெவ்வை, சாகுல் ஹமீட், உபபொலிஸ் பரிசோதகர் அமரசிறி, உப பொலிஸ் சாஜன்ட் ஜெகநாதன், உப பொலிஸ் காண்ஸ்டபிள் நஜிமுதீன், டாக்டர் கே. சுகுமார் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

1 ஆம் சாட்சியான காசிமா லெவ்வை முஸ்ஸலின் என்பவரின் சாட்சியத்தில் பாரிய முரண்பாடு காணப்படுவதாகவும் ஏனைய சாட்சிக்காரர்களும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக சாட்சியம் அளித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் அவரின் விவாதத்தில் எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து எதிரிகளை விடுதலை செய்வதாக மட்டு. மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.         

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31