பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை உரிய நீதிவான் நீதிமன்றின் உத்தரவின்றி கைது செய்தல் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
தன்னை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனுவை இன்று இரண்டாவது தடவையாக ஆராய்ந்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதன் ஊடாக அவருடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM