திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அடாத்தாக பிடித்த இடங்களை மீட்டுத் தருமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1962 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆரம்பம் தொட்டு குடியிருந்த வந்துள்ளதாகவும் 1990 களில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்ததாகவும் குடியிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். பல வருட காலமாக குடியிருப்பு பகுதிகளை அமைத்து வாழ்ந்து வந்தமைக்கான காணி அனுமதிப்பதாதிரங்களுக்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் பொது மக்களுடைய காணிகளை உரியவர்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை என தெரிவித்த மக்கள் இதில் சுமார் 175 ஏக்கர் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்கள் குடியிருந்ததற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் உரிய காணிகளை மீட்டுத்தரவில்லை என குற்றம் சுமத்துகின்றனர் .
அப்பகுதியில் உள்ள பள்ளிவாயல் மட்டுமே தங்களுக்கு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருவதற்கு உரிய அதிகாரிகள் மறுப்பதாகவும் மேலும் அங்கலாய்க்கின்றனர்.
முத்து நகர் கிராமம் என்பது ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும் இதனை ஆரம்பம் தொட்டு வெங்காயச் சேனை என்றும் அழைத்து வந்தனர். 74 குடும்பங்கள் அக்காணியில் குடியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல முறை உரியவாறு காணிகளை மீட்பதற்காக உரிய அதிகாரிகளிடம் சென்றபோதும் தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என கண்ணீர் துடைக்கின்றனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அடாத்தாக பிடித்த காணிகளை உரிய அரச அதிகாரிகள் தங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM