(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்த, சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.
அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்பு பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2019. ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞர்யிறு தின குண்டுத்தாக்குதல் இடம் பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில். நிறைவுப் பெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றகரத்தன்மை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு இன்று பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இடம் பெற்றது.
இந்த ஊடக பிரிவில் கலந்துக் கொண்டு தெளிவுப்படுத்துகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடக பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதராட்சி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM