ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

Published By: R. Kalaichelvan

19 Feb, 2020 | 02:47 PM
image

(செ.தேன்மொழி)

மாளிகாவத்த - றாகம மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை

மாளிகாவத்தை - கெத்தராம விளையாட்டரங்கிற்கு அண்மையில் கொழும்பு மத்திய பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 29 கிராம் ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாவத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

றாகம

றாகம - பட்டுவத்த மயானத்திற்கு அருகில் குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , 48 வயதுடைய நபரொருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 220 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

கல்கிஸை

கல்கிஸை - தன்தெணிய வத்த பகுதியில் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46