(செ.தேன்மொழி)
மாளிகாவத்த - றாகம மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை
மாளிகாவத்தை - கெத்தராம விளையாட்டரங்கிற்கு அண்மையில் கொழும்பு மத்திய பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 29 கிராம் ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாவத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
றாகம
றாகம - பட்டுவத்த மயானத்திற்கு அருகில் குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , 48 வயதுடைய நபரொருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 220 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
கல்கிஸை
கல்கிஸை - தன்தெணிய வத்த பகுதியில் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM