(ப.பன்னீர்செல்வம்)
ராஜீவ் காந்தி கொலைச் சந்தேகநபர்களை மோடி விடுதலை செய்தால் அது உலக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அமையும் எனவே ஒருபோதும் இது இடம்பெறமாட்டாது எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், கச்சத்தீவு விடயத்தை பயன்படுத்தி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே மோதலை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சி என்றும் அவ்வியக்கம் குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றபின்னர் தமிழ்நாட்டிலுள்ள ஈழப்பிரிவினை வாத ஆதரவாளர்களை திருப்பதிப்படுத்தும் தேவை ஜெயலலிதாவுக்கு உள்ளது.
எனவே தான் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கச்சத்தீவை மீண்டும்பெற வேண்டுமென்றும் அங்குள்ள அந்தோனியார் தேவாலயத்தை புனரமைக்கும் பணியை இந்தியாக பொறுப்பேற்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளதோடு, மீனவர் பிரச்சினை மற்றும் ரஜீவ் காந்தி கொலைச் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறும் மோடியிடம் கேட்டுள்ளார். இது ஜெயலலிதாவின் அரசியல் நாடகமாகும்.
அதேவேளை இலங்கையுடன் இந்தியா தற்போது மத்தியஸ்த நிலைமையில் ராஜதந்திர ரீதியாக உறவுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் கச்சத்தீவை மீண்டும் பெற வேண்டுமெ இந்தியா மத்திய அரசுக்கு தொந்தரவு கொடுத்து இரு நாடுகளுக்கிடையே மோதலை ஏற்படுத்த முனைகின்றது.
1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை சட்டரீதியாக இலங்கைக்கு கையளித்தார். எனவே இதனை சட்டரீதியாக மீளப்பெற முடியாது. எனவேதான் இதனை முதன்மைப்படுத்தி பலாத்கரமாக கச்சத்தீவை மீளப்பெறும் நிலைக்கு இந்தியாவை தள்ளிவிட ஜெயலலிதா முயற்சி எடுக்கிறார்.
அதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேக நபர்கள் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகைய மோடி ஏற்க மாட்டார். ஏனென்றால் அதனை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது, சர்வதேச ரீதியிலும் எதிர்பார்ப்புக்கள் கிளம்பும்.
உலக பயங்கரவாதத்திற்கு எதிராக மோடி குரல்கொடுத்து வரும் நிலையில் இச் சந்தேகநபர்களை விடுதலை செய்தால் அது உலக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துவிடும். எனவே இது ஒருபோதும் இடம்பெறப்போவதில்லை.
மோடியை சந்தித்து ஜெயலலிதா முன்வைத்த இலங்கை தொடர்பான கோரிக்கைகள் வெறும் அரசியல் நாடகமே என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM