அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கடுமையாக சாடிய ஜே.வி.பி.

Published By: Vishnu

18 Feb, 2020 | 05:50 PM
image

ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய பாதுகாப்பை பெரிதும் வலியுறுத்திய ஜனாதிபதி தற்போது பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை கூட நியமிக்க முடியாதுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் . ஜானதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது முதல் தற்போது வரை மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை . மக்களுக்கு மேலதிக நெருக்கடி நிலைமையே உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடன் தொகையினை செலுத்த முடியாமல் மேலதிக கால அவகாசம் கேட்கும் ஓர் நிலைமைக்கு இந்த அரசாங்கம் நாட்டை கொண்டு வந்துள்ளது. வரி சலுகைகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் அதன் பலன்களை பெற்றுக்கொள்ளவில்லை. 

அரசாங்கத்தினை பொறுப்பேற்று மூன்று மாத காலம் ஆன நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டதே தவிர சலுகைகள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. 

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான நிவாரண உளர் உணவு பொதிகள் வழங்குவதாக குறிப்பிட்டிருந்த அரசாங்கம்  இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. 

அரிசி மற்றும் மரக்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் வாழ்க்கை செலவீனத்தை ஏற்று நடத்த முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் முதலாம் திகதி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக அறிவித்துள்ள போதும் அதற்கான எவ்வித  நடவடிக்கையும் தற்போது மேற்கொண்டு வருவதாக தெரியவில்லை. பட்டதாரிகளுக்கான அரச தொழிலுக்கு வயது வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதன் பிரகாரம் 2012 ஆம் ஆண்டில் பட்டதாரியானவருக்கு தற்போது வயது 45 ஐ தாண்டியிருக்கும் . இவர்கள் அரச தொழிலை நம்புவது சாத்தியமானதல்ல . பல்கலை கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் வெளியேறும் போதே வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22