தங்களுடைய காலத்தில் துடுப்பாட்டத்தின் விதத்தினை மாற்றிய மூவர் என விவியன் ரிச்சட்ஸ் -சனத்ஜெயசூரிய -ஏபிடிவிலியர்ஸ் ஆகிய மூவரையும் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் அக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வீரர்கள் கிரிக்கெட் விளையாடப்படும் முறையை மாற்றினார்கள் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார்கள் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடப்படும் முறையில் முதலில்மாற்றத்தை ஏற்படுத்தியவர் மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சட்ஸ் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களிற்கு முன்னர் விவியன் ரிச்சட்சே கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தினை மாற்றினார் என குறிப்பிட்டுள்ள இன்சமாம் அவ்வேளை வேகப்பந்து வீச்சாளர்களை துடுப்பாட்ட வீரர்கள் பாக்புட்டில் சென்று விளையாடினார்கள் ஆனால் விவியன் ரிச்சட்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களை முன்னங்காலில் நகர்ந்து ஆடலாம் என்பதை காண்பித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்களை அடித்துவிளையாடலாம் என்பதை விவியன் ரிச்சட்ஸ் கற்பித்தார் அவர் எப்போதுமே தலைசிறந்த வீரர் எனவும் இன்சமாம் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடப்படும் முறையை மாற்றிய இரண்டாவது வீரர் சனத்ஜெயசூரிய என பாக்கிஸ்தானின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மாற்றத்தை சனத்ஜெயசூரிய கொண்டுவந்தார் என குறிப்பிட்டுள்ள இன்சமாம் உல் ஹக் முதல் 15 ஓவர்களில் அவர் பந்து வீச்சாளர்களை அடித்துஆட தீர்மானித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
சனத்ஜெயசூரியவிற்கு முன்னர் பந்தை உயர அடித்து ஆடுபவர்கள் துடுப்பாட்ட வீரர்களாக கருதப்படாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள இன்சமாம் உல் ஹக் ஆனால் முதல் 15 ஓவர்களில் பந்தை அடித்து விளையாடுவதன் மூலம் சனத் ஜெயசூரிய அந்த எண்ணத்தை மாற்றுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்றாவது வீரராக தென்னாபிரிக்காவின் ஏபிடிவிலியர்சினை இன்சமாம் உல் ஹக் தெரிவு செய்துள்ளார்.
கிரிக்கெட்டினை மாற்றிய மூன்றாவது வீரர் ஏபிடிவிலியர்ஸ் என குறிப்பிட்டுள்ள இன்சமாம் உல்ஹக் இன்று ரி20 ஒருநாள் போட்டிகளில் காணப்படும் வேகத்திற்கான பாராட்டுகளை நான் ஏபிடிவிலியர்சிற்கே வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏபிடிவிலியர்சே படில் சுவீப் ரிவேர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை விளையாட தொடங்கினார் எனவும் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மூவரும் ஒழுங்கான துடுப்பாட்ட வீரர்கள் என்பதுடன் வலுவான மனோநிலையை கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் மீண்டெழக்கூடியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM