(ரொபட் அன்டனி)
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40–1 பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று பேரவையின் உறுப்பு நாடுகள் உறுதியளித்ததாக ஜெனிவா சென்று திரும்பிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுவரை அமுலில் உள்ள இந்த ஜெனிவா பிரேரணையை கால அட்டவணையின் அடிப்படையில் விரைவாக அமுல்படுத்தவேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய ஜெனிவா சென்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
அந்த சந்திப்புக்கள் மற்றும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
சுமந்திரன் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,
கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் ஜெனிவா சென்றிருந்தேன். இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகததின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்ச நடத்தினேன்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மற்றும் ஜெனிவாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது. எமது நிலைப்பாட்டை நான் தெ ளிவாக எடுத்துரைத்தேன். அரசாங்கம் 40–1 என்ற பிரேரணையை ஏற்க மறுத்தால் அல்லது அதில் ஏதாவது மாற்றங்களை செய்தால் உறுப்பு நாடுகள் அது தொடர்பில் என்ன செய்யவேண்டும் என்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கமளித்தேன்.
இந்த நிலையில் 40–1 பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று பேரவையின் உறுப்பு நாடுகள் உறுதியளித்தன.
மிக முக்கியமாக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுவரை அமுலில் உள்ள இந்த ஜெனிவா பிரேரணையை கால அட்டவணையின் அடிப்படையில் விரைவாக அமுல்படுத்தவேண்டும் என்பதே மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM