மாணவர்களின் உடல் நிலையில் திடீரென மாற்றமேற்பட்டு உடம்பெங்கும் அரிப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டதால் அம்மாணவர்கள் கந்தகெட்டிய அரசினர் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்படுத்தப்பட்டுள்ளனர்.
பதுளை கந்தகெட்டிய பகுதியின் உல்பத்த கனிஸ்ட வித்தியாலயத்தில் மூன்று மாணவிகளும் 12 மாணவர்களுமாக 15 பேருக்கே உடம்பெங்கும் அரிப்பு ஏற்பட்டு திடீர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
மேற்படி வித்தியாலயத்தின் குறிப்பிட்ட வகுப்பறை நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று 2020-02-17 குறித்த வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டு வகுப்பு ஆரம்பமாகியது.
அதைத் தொடர்ந்து அவ்வகுப்பிற்கு சென்ற மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் கந்தகெட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து குறித்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் காமினி மத்துமகேயிடம் வினவியபோது,
நோய்வாய்ப்பட்ட மாணவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் நோய் கண்டறியப்படவில்லை.
உண்ட உணவு ஒவ்வாமையாக இருக்கலாம் என்று கருதுகின்றேன். ஆனாலும் மாணவர்களின் நிலை ஆபத்தானதாக இல்லை. இவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM