சீனாவில் சுமார் மூவாயிரம் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டமான தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) வருடாந்த கூட்டத்தை ஒத்தி வைப்பது குறித்து அந் நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சீன அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சியை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்த கூட்டமானது 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சீனாவில் புரட்சிகள் முடிவடைந்ததிலிருந்து ஒத்தி வைக்கப்படவோ அல்லது இடைநிறுத்தப்படவோ இல்லை.
இக் கூட்டமானது கடுமையான சுவாச நோயானா சார்ஸ் வைரஸ் தொற்றுக்கு மத்தியலும் கடந்த 2003 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இடம்பெற்றது.
சார்ஸ் வைரஸ் சீனாவில் தோற்றம் பெற்று உலகம் முழுவதும் சுமார் 8000 க்கும் மேற்பட்டவர்களை பாதித்ததுடன் 774 பேரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்தது.
இந் நிலையிலேயே தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்த கூட்டமானது எதிர்வரம் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்தது.
இந்த கூட்டத்திற்கு முன்னர் பெப்ரவரி 24 ஆம் திகதி சுமார் 200 க்கும் குறைவான தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று தலைநகரில் கூடி கூட்டம் தொடர்பான அமர்வை ஒத்தி வைப்பது குறித்து மறு ஆய்வு செய்யவுள்ளதாகவும் சீனவின் அரச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
PHOTO CREDIT : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM