உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

17 Feb, 2020 | 01:38 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற  நீதிவான்  ஐ.என்.றிஸ்வான்  முன்னிலையில் விசாரணைக்கு இருவேறு  சந்தர்ப்பங்களில் திங்கட்கிழமை (17)  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த   தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில்  வைக்கப்பட்ட அனைவரும்  சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து பொலிஸாரின் ஆட்சேபனையுடன்  அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை  எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடைபுடையதாக சந்தேகிக்கப்படும் இவர்கள் கடந்த காலங்களில் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து  பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும்  பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58