சவேந்­திரவுக்கான தடையை ஆளும் தரப்பு தேர்தல் பிர­சா­ரத்­துக்கு பயன்­ப­டுத்தும் என்கிறார் ஹிரு­ணிகா

Published By: J.G.Stephan

17 Feb, 2020 | 10:57 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

இரா­ணுவ தள­பதி சவேந்­திர சில்­வா­வுக்கும், அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும் அமெ­ரிக்­கா­வுக்குள் பிர­வே­சிக்க விதிக்­கப்­பட்­டுள்ள தடை­யினை ஆளும் தரப்­பினர் பொதுத்­தேர்தல் பிர­சா­ரத்துக்கு பயன்­ப­டுத்திக் கொள்­வார்கள் என்று ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­ம­சந்­திர தெரி­வித்தார்.

சிறந்த  அர­சாங்­கத்தை    உரு­வாக்க     தனக்கு   வாய்ப்­ப­ளிக்­க­வில்லை   என்று  முன்னாள்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­வே­னவால் ஒரு­போதும் குறிப்­பி­ட­மு­டி­யாது.  நல்­லாட்­சியின்  நோக்­கத்தை இவரே  இல்­லா­தொ­ழித்தார்   எனவும் அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று  ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஆட்சி அதி­கா­ரத்தை  கைப்­பற்­று­வ­தற்­காக   பொது­ஜன பெர­மு­ன­வினர்  ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் குறிப்­பிட்ட விட­யங்கள்   அனைத்தும் இன்று பொய்­யாக்­கப்­பட்­டுள்­ளன.   ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­தலை   முழு­மை­யாக தங்­களின் அர­சியல் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்திக் கொண்­டார்கள். ஆட்­சிக்கு வந்து  ஒரு மாத காலத்தில்   குண்­டுத்­தாக்­கு­தலின்   குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தா­கவும் குறிப்­பிட்­டார்கள். ஆனால் மூன்று  மாத   காலத்தில்   எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

   மத்­திய  வங்­கியின் பிணை­முறி கொடுக்கல்  வாங்­கல்­க­ளையும் அர­சியல் பிர­சா­ர­மாக்­கி­னார்கள்.  தட­ய­வியல் கணக்­க­றிக்­கையில்  கடந்த  அர­சாங்­கத்தில்   பங்­குச்­சந்­தையில் அதி­க­ளவில்  மோசடி  இடம் பெற்­றுள்­ளது என்று  குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மை­யினால் இன்று பிணை­மு­றியை   அர­சியல் பிர­சா­ர­மாக்க  ஆளும்  தரப்­பினர் விரும்­ப­வில்லை.  

இரா­ணுவ  தள­பதி சவேந்­திர சில்வா மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­னர்கள்  அமெ­ரிக்­கா­விற்கு செல்ல  விதிக்­கப்­பட்­டுள்ள தடை­யினை அர­சாங்கம்  இரா­ஜ­தந்­திர  மட்­டத்தில் மாத்­திரம்  திருத்திக் கொள்ள வேண்டும்.  பொது தேர்­தலில்  இதனை   ஆளும்  தரப்­பினர் முழு­மை­யாக தங்­களின்  அர­சியல்  தேவை­க­ளுக்­காக  பிர­சா­ர­மாக்கிக் கொள்­வார்கள்.

சிறந்த  அர­சாங்­கத்தை  கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­மைக்கு   வாய்ப்பு வழங்­க­வில்லை என்று  முன்னாள் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  குறிப்­பி­டு­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அவ­ரி­னா­லேயே   நல்­லாட்சி அர­சாங்கம் பல­வீ­ன­ம­டைந்­தது, தேவை­யற்ற விட­யங்­க­ளுக்­காக அர­சாங்­கத்­துடன் முரண்­பட்டுக் கொண்டார். அதனை   எதிர்த்­த­ரப்­பினர் முழு­மை­யாக  பயன்­ப­டுத்திக் கொண்டு ஆட்­சியை  கைப்­பற்றிக் கொண்­டார்கள்.

மிக்  விமான கொள்­வ­னவு விவ­கா­ரத்தில்   கைது செய்­யப்­பட்­டுள்ள   உத­யங்க வீர­துங்க  டுபாய் நாட்டில் கைது செய்­யப்­பட்டு  நாடு கடத்­தப்­பட்டார்.  இன்னும்  ஓரிரு நாட்­க­ளுக்குள் அவ­ருக்கு  பிணை  வழங்­கப்­படும்.   ஆட்சி மாற்றத்தின்  மாற்றங்களை   மக்கள்   இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியில்  ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வெகுவிரைவில் ஜனாதிபதி  அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்படுவார். அவருடன்  சஜித் பிரேமதாஸவினால் மாத்திரமே  இணைந்து செயற்பட முடியும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50