இந்திய கடற்பரப்பில் வைத்து, படகுடன் மூன்று இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் நேற்று (16.02.2020) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இராமேஸ்வரம் அடுத்து உச்சிப்புளியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு சொந்தமான ரோந்து ஹெலிகாப்டர் நேற்று சனிக்கிழமை இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய விசை படகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை படகை முற்றுகையிட்டுள்ளது.
இதன் போது, இந்திய விசை படகு தப்பி சென்றுள்ளது. ஆனால் தப்பிசெல்ல முயன்ற இலங்கை படகையும் அதில் இருந்த 3 பேரையும் இந்திய கடற்படை வீரர்கள் அரிச்சல் முனை கடல் பகுதிக்கு கொண்டு சென்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தர்கள் எனவும் இவர்கள் இலங்கையிலிருந்த மீன்பிடிப்பதற்காக வந்த போது எல்லை தெரியாமல் இந்திய எல்லைக்குள் வந்தார்களா? அல்லது கடத்தல் தொழில் ஈடுபட வந்தார்களா? என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக இந்திய உளவுத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM