இந்திய கடற்பரப்பில்  இலங்கை மீனவர்கள்  மூவர்  கைது!

16 Feb, 2020 | 01:42 PM
image

இந்திய கடற்பரப்பில் வைத்து, படகுடன்  மூன்று இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் நேற்று (16.02.2020) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

இராமேஸ்வரம் அடுத்து உச்சிப்புளியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு சொந்தமான  ரோந்து ஹெலிகாப்டர் நேற்று சனிக்கிழமை  இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய விசை படகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை படகை முற்றுகையிட்டுள்ளது.

இதன் போது, இந்திய விசை படகு தப்பி சென்றுள்ளது. ஆனால்  தப்பிசெல்ல முயன்ற இலங்கை படகையும் அதில் இருந்த 3 பேரையும் இந்திய கடற்படை வீரர்கள் அரிச்சல் முனை கடல் பகுதிக்கு கொண்டு சென்று கைது செய்துள்ளனர். 

 கைது செய்யப்பட்ட மூவரும் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தர்கள் எனவும் இவர்கள் இலங்கையிலிருந்த மீன்பிடிப்பதற்காக வந்த போது எல்லை தெரியாமல் இந்திய எல்லைக்குள் வந்தார்களா? அல்லது கடத்தல் தொழில் ஈடுபட வந்தார்களா? என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக இந்திய உளவுத்துறை  மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02