கொரோனா வைரஸ் தொற்று காரணமா, உலகநாடுகள் சீனாவிக்கு பயணத்தடை விதித்துள்ளன. இதன் காரணமா அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை சீனா இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஜிம்னாஸ்டிக் தலைமை நிர்வாக அதிகாரி கிட்டி சில்லர், தமது அறிக்கையில்
"சீன ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் மற்றும் அதன் ஜனாதிபதியுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்கள் பிரதிநிதிகள் அனைவரும் நலமாக உள்ளனர், மேலும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் அவர்களிடம் அறியப்படவில்லை."
"இருந்த போதிலும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பயணக் கட்டுப்பாடுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும்." என தெரவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் தகுதி பெற்ற 12 சீன வீரர்களில் ஜாங் செங்லாங், நான்கு முறை உலக சாம்பியனானவர். இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் அணிக்கு தங்கம் மற்றும் ரியோ விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM