மீட்டியாகொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொட, காலி - கொழும்பு பிரதான வீதியில் தொடகமுவ தேசிய பாடசாலைக்கு அருகில் அம்பலாங்கொடை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியிலிருந்த பெண்ணொருவரும் அவரது கணவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரழந்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த பெண் கணவருடன் ஹிக்கடுவையிலிருந்து தமது வீட்டிற்கு திரும்புகையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரின் கணவர் மேலதிக சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையிலிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM