தம்பலகாமம் - கந்தளாய் பகுதியில் நேற்று பிற்பகல் கடையொன்றை திருட சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் திருட்டுக்காகப் பயன்படுத்திய வாடகை காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வாககமானது பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, காரினுள் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் மற்றும் திருடப் பயன்படுத்திய பல உபகரணங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட மேலதிக சோதனை நடவடிக்கைகளின் போது காரின் சில்லில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு நாடு பூராவுமுள்ள பல கடைகளில் திருடி வந்துள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களை பல கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளதாக மேலதிக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM