பிரித்தானிய அரசாங்கமானது லண்டனிலிருந்து சர்வதேச பொதுநலவாய அமைப்பைச் செயற்படுத்தி வரும் பொதுநலவாய செயலகத்திற்கு தன்னால் அளிக்கப்பட்டு வரும் நிதியை இடைநிறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி பொதுநலவாய செயலகம் தனது நிதி செயற்கிரமங்களை முன்னேற்றும் வரை அதற்கு பிரித்தானியாவால் வருடாந்தம் தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் 4.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நிதியை நிறுத்தி வைப்பதாக பொதுநலவாய செயலகத்தின் செயலாளர் நாயகமான பரோனஸ் ஸ்கொட்லான்ட்டுக்கு அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த செயலகம் வெளி கணக்காய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளை நிறைவேற்றி வருவதாக வலியுறுத்தியுள்ளது.
பரோனஸ் ஸ்கொட்லான்ட் தனது நண்பரொருவரால் செயற்படுத்தப்படும் கம்பனியொன்றுக்கு இலாபகரமான ஆலோசனை உடன்படிக்கையொன்றை வழங்கி வழமையான போட்டி அடிப்படையிலான உடன்படிக்கை விதிகளை மீறியுள்ளதாக கணக்காய்வாளர்கள் குற்றஞ்சாட்டியதையடுத்தே பிரித்தானியா மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் பொதுநலவாய செயலகத்துக்கான தமது விருப்புரிமை நிதியை அந்த செயலகத்தின் நிதி ஸ்திரத்தன்மையடையும் வரை இடைநிறுத்தியுள்ளன.
பிரித்தானியாவின் மேற்படி தீர்மானம் பொதுநலவாய செயலகத்திற்கு பாரிய நிதி நெருக்கடி அச்சுறுத்தலொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன் பரோனஸ் ஸ்கொட்லான்ட்டின் தலைமைத்துவம் குறித்தும் புதிதாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
பரோனஸ் ஸ்கொட்லான்ட் இரண்டாவது தவணையாக பதவி வகிக்கும் வகையில் அவரது பதவிக் காலத்தை இந்த வருடம் புதுப்பிக்க விடுக்கப்பட்ட அழைப்புக்களை பொதுநலவாய அரசாங்கங்களின் தலைவர்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிதி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், நாம் அங்கத்துவ நாடுகளுக்கு பயனுறுதிப்பாடு மிக்க பொதுநலவாயமொன்றை வழங்க உறுதிபூண்டுள்ளோம். அதனால் இந்த நிதியாண்டுக்கு தொழில்நுட்ப கூட்டுறவுக்காக பொதுநலவாய நிதியத்துக்கு நிதியளிப்பதற்கு ஒரு தொகை நிபந்தனைகளை முன்வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM