ரவீந்திர உட்­பட இரு­வ­ரையும் விடு­தலை செய்ய முடி­யாது : கோட்டை நீதிவான் தீர்ப்பு

Published By: J.G.Stephan

14 Feb, 2020 | 11:15 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
ஐந்து  மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோ­த­மாக தடுத்து வைத்து, கப்பம் பெற்­றமை மற்றும்  காணாமல் ஆக்­கி­யமை தொடர்பில்  பிர­தான சந்­தேக நப­ரான நேவி சம்பத் எனப்­படும் கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்­டி­ஆ­ரச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்டி ஆரச்­சிக்கு சட்­டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்­தி­ருக்க உத­வி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி, பாது­காப்புப் படை­களின் முன்னாள் தலைமை அதி­காரி ரவீந்­திர விஜ­ய­கு­ண­வர்­தன உள்­ளிட்ட இரு­வரை  விடு­தலை செய்­வ­தற்­கான இய­லுமை இல்லை  என கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று முன்­தினம்  தீர்ப்­ப­ளித்­தது.



 இந்த விவ­காரம் குறித்த வழக்கு விசா­ரணை  நேற்று கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது பிணையில் உள்ள சந்­தேக நபர்­க­ளான லக்­சிறி அம­ர­சிங்க எனும் தென்­னந்­தோப்பு உரி­மை­யா­ளரும் அத்­மிரால் ரவீந்ர விஜே­கு­ன­ரத்­னவும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

 லக்­சிறி அம­ர­சிங்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சம்பத் மெண்­டிசும், ரவீந்ர சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்­னவும் பிர­சன்­ன­மா­கினர்.  விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­தர  ஆஜ­ரானார்.

இதன்­போதே , 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தின்  பிர­தி­வா­தி­யான கடற்­ப­டையின் முன்னாள்  லெப்­டினன் கொமாண்டர் சந்­தன பிரசாத் ஹெட்­டி­யா­ரச்சி, நீதி­மன்ற புறக்­க­ணிப்பில் ஈடு­பட்டு நாட்­டை­விட்டு தப்­பிச்­செல்­வ­தற்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் ரவீந்­திர விஜ­ய­கு­ண­வர்­தன மற்றும் லக்­சிறி அம­ர­சிங்க ஆகி­யோரை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து விடு­விக்க முடி­யாது என நீதவான் தீர்ப்­ப­ளித்தார்.

இந்த 2 சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நீரூ­பிப்­ப­தற்கு போது­மான சாட்­சி­யங்கள் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் காணப்­ப­டு­வ­தாக நீதி­மன்றம் கரு­து­வ­தா­கவும் அந்த தீர்ப்பில் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க  சுட்­டிக்­காட்­டினார்.

அதற்­க­மைய, குற்­ற­வியல் சட்டக் கோவையின் 120/3 சரத்­திற்கு அமைய, சந்­தே­க­ந­பர்­களை விடு­விக்­கு­மாறு கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி சந்­தேக நபர் இருவர் சார்­பிலும் முன்­வைக்­கப்ப்ட்ட கோரிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும்  நீதிவான் அறி­வித்தார்.

சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான உண்மைத் தன்மை குறித்து வழக்கு விசா­ர­ணையின் பின்­னரே தீர்­மா­னிக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதிவான் இவ்வழக்கில் மற்றுமொறு பிரதிவாதியாக சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியைப் பெயரிடுவது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின்போது தீர்மானிப்பதாக அறிவித்து வழக்கை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41