(எம்.எப்.எம்.பஸீர்)
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ரவீந்திர விஜயகுணவர்தன உள்ளிட்ட இருவரை விடுதலை செய்வதற்கான இயலுமை இல்லை என கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணை நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள சந்தேக நபர்களான லக்சிறி அமரசிங்க எனும் தென்னந்தோப்பு உரிமையாளரும் அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவும் ஆஜராகியிருந்தனர்.
லக்சிறி அமரசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிசும், ரவீந்ர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் பிரசன்னமாகினர். விசாரணையாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர ஆஜரானார்.
இதன்போதே , 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தின் பிரதிவாதியான கடற்படையின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பிச்செல்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ரவீந்திர விஜயகுணவர்தன மற்றும் லக்சிறி அமரசிங்க ஆகியோரை விசாரணைகளிலிருந்து விடுவிக்க முடியாது என நீதவான் தீர்ப்பளித்தார்.
இந்த 2 சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கிடமின்றி நீரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் காணப்படுவதாக நீதிமன்றம் கருதுவதாகவும் அந்த தீர்ப்பில் நீதிவான் ரங்க திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, குற்றவியல் சட்டக் கோவையின் 120/3 சரத்திற்கு அமைய, சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி சந்தேக நபர் இருவர் சார்பிலும் முன்வைக்கப்ப்ட்ட கோரிக்கையை நிராகரிப்பதாகவும் நீதிவான் அறிவித்தார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைத் தன்மை குறித்து வழக்கு விசாரணையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதிவான் இவ்வழக்கில் மற்றுமொறு பிரதிவாதியாக சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியைப் பெயரிடுவது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின்போது தீர்மானிப்பதாக அறிவித்து வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ரவீந்திர உட்பட இருவரையும் விடுதலை செய்ய முடியாது : கோட்டை நீதிவான் தீர்ப்பு
Published By: J.G.Stephan
14 Feb, 2020 | 11:15 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM