(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே செயற்குழுவை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள பரந்துபட்ட கூட்டணியின் சின்னம் தொடர்பில் இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே செயற்குழுவை கூட்டுமாறு சஜித் பிரேமதாச கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை ஏற்று சின்னம் தொடர்பில் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கு நாளை காலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM