முன்னாள் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானின் எண்ணக்கருவிற்கு அமைய கடந்த வருடத்தில் ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் அனுமதியுடன் மாற்றம் செய்யப்பட்ட பாடசாலைகளின் பெயர்கள் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் ஊவா மாகாணத்திலுள்ள 143 தமிழ் மொழி பாடசாலைகளின் பெயர்கள் மாற்றங்கள் வெளியாகியிருந்தன.
அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பெயர்களை பாடசாலைகளில் பயன்படுத்துவதற்கு தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஜி. அபேசிங்க பண்டா கடிதம் மூலம் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் பதுளை மாவட்டத்தில் இயங்கும் பதுளை, வியலுவ, பண்டாரவளை, பசறை, வெலிமடை ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 133 தமிழ் மொழிமூல பாடசாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் இயங்கும் மொனராகலை, பிபிலை கல்வி வலயங்களில் உள்ள 10தமிழ் மொழி மூல பாடசாலைகளும் புதிய பெயர் மாற்றம் பெற்று இயங்க உள்ளன. இதற்கு முன்னர் பெரும்பாலான தமிழ் பாடசாலைகள் அமைந்துள்ள ஊர் பெயர்களிலும் ஒரே ஊரில் உள்ள ஆரம்ப பாடசாலைகள் அதே ஊரின் பெயரில் இலக்கம் 1,2,3 என அடையாளப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக பாடசாலைகளில் வள பகிர்வு, அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை அதிகாரிகள் எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் புதிய பெயர் மாற்றமானது பல்வேறு சாதக நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என கல்விமான்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் மகிழ்ச்சி தெரிவிக் கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM