இணைத் தலைமைத்துவ விவகாரத்தில் முரண்பட நாம் விரும்ப வில்லை : மஹிந்த அமரவீர 

Published By: R. Kalaichelvan

13 Feb, 2020 | 04:19 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைமைத்துவம் வழங்குமாறு நாம் கோரவில்லை. அது ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் என்பதாலேயே கட்சி தலைவர் கூட்டத்தில் பேசப்பட்டது.

எனவே இவ்விடயத்தை வைத்து முரண்பட்டுக் கொள்ள நாம் விரும்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகிய உயர்மட்ட சிரேஷ்ட தலைவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சுதந்திர கட்சியை விமர்சிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் நாம் பெற்றுக் கொடுத்த வெற்றியை அவர்கள் மதிக்கின்றனர். எனவே தனித்து பயணிக்கும் முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது. எனவே பொதுத் தேர்தலில் நாம் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்.

 ஜனாதிபதித் தேர்தலில் அவரை பாதுகாத்ததைப் போலவே பொதுத் தேர்தலில் பாதுகாப்போம். காரணம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனக்குள்ள வரப்பிரசாதங்கள், அதிகாரங்களை என்பவற்றை புறந்தள்ளி புதியதொரு அரசியல் சூழலை ஏற்பத்தியிருக்கிறார். அவர் இந்த போராட்டத்தைத் தொடர தனித்து பயணித்தால் முடியாது. எனவே நாம் அவருக்கு துணை நிற்போம் என அவர் இதன்போது தெரவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43