(எம்.மனோசித்ரா)
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைமைத்துவம் வழங்குமாறு நாம் கோரவில்லை. அது ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் என்பதாலேயே கட்சி தலைவர் கூட்டத்தில் பேசப்பட்டது.
எனவே இவ்விடயத்தை வைத்து முரண்பட்டுக் கொள்ள நாம் விரும்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகிய உயர்மட்ட சிரேஷ்ட தலைவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சுதந்திர கட்சியை விமர்சிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் பெற்றுக் கொடுத்த வெற்றியை அவர்கள் மதிக்கின்றனர். எனவே தனித்து பயணிக்கும் முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது. எனவே பொதுத் தேர்தலில் நாம் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்.
ஜனாதிபதித் தேர்தலில் அவரை பாதுகாத்ததைப் போலவே பொதுத் தேர்தலில் பாதுகாப்போம். காரணம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனக்குள்ள வரப்பிரசாதங்கள், அதிகாரங்களை என்பவற்றை புறந்தள்ளி புதியதொரு அரசியல் சூழலை ஏற்பத்தியிருக்கிறார். அவர் இந்த போராட்டத்தைத் தொடர தனித்து பயணித்தால் முடியாது. எனவே நாம் அவருக்கு துணை நிற்போம் என அவர் இதன்போது தெரவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM