பல்வேறு அரசாங்கங்களுடனான வேண்டுகோளுக்குப் பிறகு, வெஸ்டர்டாம் என்ற பயணக் கப்பல் இறுதியாக கம்போடியாவின் சிஹானுக்வில்லில் உள்ள ஒரு துறைமுத்துக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலானது கடந்த சில நாட்களில் தாய்லாந்து, தைவான், குவாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணித்தபோதும் அங்கு கப்பலை நிறுத்துவதற்கான அனுமதியானது மறுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் கப்பலில் இல்லாவிட்டாலும் ஏனைய கப்பல்களில கொரோனா தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளமையினால் அச்சம் காரணமாக இவ்வாறு கப்பலை மேற்படி நாடுகளில் நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் பின்னர் கப்பலில் பயணித்த பயணிகள் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரிந்ததும், இவ்வாறு கம்போடிய மண்ணில் அவர்கள் தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்டர்டாம் பயணிக் கப்பலில் 802 பணியாளர்கள் உட்பட மொத்தமாக 2000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
அமெரக்கர்கள் : 650
கனடா : 271
பிரிட்டன் : 127
நெதர்லாந்து : 91
அவுஸ்திரேலியா : 79
ஜேர்மன் : 57
சீனா மற்றும் ஹொங்கொங் : 30
ஏனைய நாடுகள் : 30
photo credit : twitter
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM