பிரித்தானியாவில் பிறைட் டன் பிராந்தியத்தைச் சேர்ந்த சாரணர் தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து 5 பாடசாலைகளில் வைரஸ் தொற்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பாடசாலையின் ஆசிரியர்களும் மாணவர்களும் தம்மைத் தாமே தனிமைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ள னர். சாரணர் தலைவரான ஸ்டீ பன் வெல்ஷ் (53 வயது) சிங்கப்பூருக்கு வர்த்தக சுற்றுலாவொன்றுக்கு சென்றவேளை வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து பிரான்ஸ் சென்ற அவர் அங்கிருந்த தனது நண்பர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படக் காரணமாக இருந்துள்ளார்.
தொடர்ந்து பிறைட்டன் நகருக்கு திரும்பிய அவர், அங்குள்ள பலருக்கு வைரஸ் தொற்றை பரப்பியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மேற்படி வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டதையடுத்து தானே அந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் என்பதை ஸ்டீவன் வெளிப்படுத்தியுள்ளார்.
விற்பனை அதிகாரியான அவர் பிரித்தானிய மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்து உரையாற் றுகையில், தான் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் இந்நிலையில் தன்னால் ஏனையவர் களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை உணர்ந்ததாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM