ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கு இன்று தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அழுத்தமும் ஆதரவும் பெருகுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. புதிய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எது எப்படியானாலும் இந்த மக்களுக்கான சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆயிரம் என்ற தொகை யார் மூலமாக கிடைத்தாலும் நல்லதே என இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை பிரதித் தலைவருமான இரா.தங்கவேல் தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தோட்ட நிர்வாகிகளில் சிலர் கையாளும் குறுக்கு வழிகளும் இலாபம் ஈட்டுவதற்குக் கடைப்பிடிக்கின்ற தந்திரங்களுமே சம்பள இழுத்தடிப்புக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
புதிய அரசாங்கம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை அறிவித்த பின்னர் தமது எதிர்ப்பைக் காட்டுகின்ற முதலாளிமார்களின் பிரதிநிதிகள் அதற்கான ஆக்கபூர்வமான காரணிகளைக் கொடுக்கத் தவறி இருக்கிறார்கள். அவர்களது தொடர் ஒப்பாரியாக தோட்டங்கள் இலாபகரமாகச் செயற்படவில்லை என்பதை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் கொள்ளை இலாபம் ஈட்டுவது என்பதை மூடிமறைத்து மேலும் மேலும் அரசாங்கத்திடமிருந்து வரிச்சலுகைகளையும் ஏனைய சாதகத் தன்மைகளையும் ஈட்டிக்கொள்கின்றனர்.
தோட்டங்களைத் திட்டமிட்டே காடாக்கி வருவதோடு இன்று பொன்கொழிக்கும் பூமியாக இருக்கின்ற தோட்டங்களை வன ஜீவராசிகளினதும், கொடிய விலங்குகளினதும், அன்றாடம் தோட்டப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான அப்பாவி தோட்டத் தொழிலாளர்களைக்கொட்டித் தீர்க்கும் குளவிகளினதும் கோட்டமாக மாற்றி அமைத்துள்ளமையே இன்றைய தோட்ட முதலாளிகள் ஆற்றிய பெரும் பங்காகும்.
சென்ற கூட்டுப்பேரத்தின் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்திய கோரிக்கை தோட்டங்களைச் சுத்தமாக அதாவது தேயிலை மலைகளை சுத்தம் செய்யவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்திலும் சேர்த்துக்கொண்ட தோட்ட முதலாளிமார் கம்பனிகளில் எத்தனை தோட்டங்களை சுத்தம் செய்திருக்கிறார்கள்.
எனவே தோட்ட முதலாளிமார்களின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும் மேலும் வரிச்சலுகைகளையும் மற்ற ஒத்து ழைப்பையும் வாரி வழங்குவதைத் தவிர்த்து அவர்களது தந்திரமான திட்டங்களையும் அம்பலப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM