பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதன் வேட்பாளர்களை களமிறக்கும் எனதொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
நேற்றைய தினம் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் புதிய ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த நான்கரை வருடங்களாக நான் அமைச்சராக இருந்த போது ஆயிரங்கணக்கான வீடுகளைக் கட்டி முடித்துள்ளேன். அதற்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சுமார் 500 வீடுகளைக் கட்டிக் கொடுத்து அவற்றை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளேன்.
நான் உங்களில் ஒருவன். தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெற்று அமைச்சரான பின்னர் மக்களை ஏமாற்றவில்லை. அவர்கள் நலன் சார்ந்த பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளேன். இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அவற்றில் 1500 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2500 வீடுகள் கையளிக்க வேண்டிய நிலையில் தயாராக உள்ளன. அவற்றுக்கு மின்சாரம், குடிநீர், பாதை வசதிகளுடன் விரைவில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதை வரவேற்கிறோம். அதேநேரம், இங்குள்ள அமைச்சர்கள் சிலரும், நவீன் திசாநாயக்கவும் சேர்ந்து அரசாங்கம் வழங்க இருந்த சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டதை நாம் மறந்து விட முடியாது. அவ்வாறு சம்பள உயர்வு கிடைத்து விட்டால் அதைப் பெற்றுக் கொடுத்த திகாம்பரத்துக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்று அதைக் கிடைக்க விடாமல் செய்து விட்டார்கள். சம்பள உயர்வு என்பது தேர்தலை நோக்கமாகக் கொண்டும் இருக்கக் கூடாது. அதேநேரம் சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலாளர்களுக்கு வேலைச் சுமையை ஏற்படுத்துவதையும், கூடுதலான கொழுந்து பறிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதையும் தொழிலாளர்களுக்கு அரைப்பேர் போடுவதையும் நாம் அனுமதிக்க முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் நுவரெலியா மாவட்டத்தில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதே அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் நுவரெலியா, கண்டி, கொழும்பு, பதுளை முதலான மாவட்டங்களில் போட்டியிடவுள்ளார்கள். கடந்த தேர்தலில் எமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு உண்மையான சேவைகளை வழங்கியுள்ளோம். அதேபோல், மீண்டும் சேவை செய்யக் காத்திருக்கின்றோம்.
இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது. கடந்த நான்கரை வருட காலமாக நாம் செய்ததை விட இன்னும் கூடுதலான சேவையை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க மக்கள் எம்மவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM