"சஜித் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யி­லேயே தமிழ் முற்­போக்கு கூட்­டணி கள­மி­றங்கும்" : திகாம்­பரம்

Published By: J.G.Stephan

13 Feb, 2020 | 12:23 PM
image

பொதுத் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் அமை­ய­வுள்ள கூட்­ட­ணியில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி அதன் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்கும் எனதொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் எம்.பி. தெரி­வித்தார்.

நேற்றைய தினம் பத்­தனை மவுண்ட்­வேர்ணன் தோட்­டம் ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் புதிய ஆல­யத்­துக்­கான அடிக்கல் நாட்டும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் சோ. ஸ்ரீதரன் உட்­பட தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்து கொண்ட  இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

கடந்த நான்­கரை வரு­டங்­க­ளாக நான் அமைச்­ச­ராக இருந்த போது ஆயிரங்கணக்­கான வீடு­களைக் கட்டி முடித்­துள்ளேன். அதற்கு முன்­ன­தாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நூறு நாள் வேலைத் திட்­டத்தில் சுமார் 500 வீடு­களைக் கட்டிக் கொடுத்து அவற்றை மக்கள் பாவ­னைக்கு கைய­ளித்­துள்ளேன்.

நான் உங்­களில் ஒருவன். தேர்தல் களத்தில் வாக்­கு­களைப் பெற்று அமைச்­ச­ரான பின்னர் மக்­களை ஏமாற்­ற­வில்லை. அவர்கள் நலன் சார்ந்த பல்­வேறு வேலைத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்திக் காட்­டி­யுள்ளேன். இந்­திய அர­சாங்­கத்தின் 4000 வீடுகள் கட்டி முடிக்­கப்­பட்டு அவற்றில் 1500 வீடுகள் பய­னா­ளி­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இன்னும் 2500 வீடுகள் கைய­ளிக்க வேண்­டிய நிலையில் தயா­ராக உள்­ளன. அவற்­றுக்கு மின்­சாரம், குடிநீர், பாதை வச­தி­க­ளுடன் விரைவில் மக்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு கிடைப்­பதை வர­வேற்­கிறோம். அதே­நேரம், இங்­குள்ள அமைச்­சர்கள் சிலரும், நவீன் திசா­நா­யக்­கவும் சேர்ந்து அர­சாங்கம் வழங்க இருந்த சம்­பள உயர்வை தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்­டதை நாம் மறந்து விட முடி­யாது. அவ்­வாறு சம்­பள உயர்வு கிடைத்து விட்டால் அதைப் பெற்றுக் கொடுத்த திகாம்­ப­ரத்­துக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்று அதைக் கிடைக்க விடாமல் செய்து விட்­டார்கள். சம்­பள உயர்வு என்­பது தேர்­தலை நோக்­க­மாகக் கொண்டும் இருக்கக் கூடாது. அதே­நேரம் சம்­பள உயர்வு என்ற போர்­வையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலைச் சுமையை ஏற்­ப­டுத்­து­வ­தையும், கூடு­த­லான கொழுந்து பறிக்க வேண்டும் என்று நிர்ப்­பந்­திக்­க­ப்ப­டு­வ­தையும் தொழி­லா­ளர்­க­ளுக்கு அரைப்பேர் போடு­வ­தையும்  நாம் அனு­ம­திக்க முடி­யாது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமோ­க­மாக வெற்றி பெற்­றுள்ளோம். தமிழ் முற்­போக்கு கூட்­டணி மீது நம்­பிக்கை வைத்து மக்கள் வாக்­க­ளித்­துள்­ளார்கள். அதே அடிப்­ப­டையில் சஜித் பிரே­ம­தா­சவின் தலை­மையில் அமை­ய­வுள்ள கூட்­ட­ணியில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்கள் நுவ­ரெ­லியா, கண்டி, கொழும்பு, பதுளை முத­லான மாவட்­டங்­களில் போட்­டி­யி­ட­வுள்­ளார்கள். கடந்த தேர்­தலில் எமக்கு வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்த மக்­க­ளுக்கு உண்­மை­யான சேவை­களை வழங்­கி­யுள்ளோம். அதேபோல், மீண்டும் சேவை செய்யக் காத்திருக்கின்றோம்.

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது. கடந்த நான்கரை வருட காலமாக நாம் செய்ததை விட இன்னும் கூடுதலான சேவையை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க மக்கள் எம்மவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37