எகிப்திய பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 பயங்ரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
எகிப்தின் அல் - அரிஷ் நகரத்தின் ஓபீடாட் மாவட்டத்தில் ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட எகிப்திய பொலிஸார் பயங்கரவாதிகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டதோடு , அவர்களின் மறைவிடத்தில் இருந்து பல்வேறு வகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
அத்தோடு ஆரம்பத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து 11 பயங்ரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள் வைத்திருந்திருந்த ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதேவேளை, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கராவதிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். அவ்வாறு தப்பிக்க முயன்ற 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு, அவர்களிடம் இரண்டு தற்கொலை தாக்குல்களுக்கு பயன்படுத்தும் தற்கொலை உடைகள் இருந்தாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி வடக்கு சினாயில் இராணுவ சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதலைகளை மேற்கொள்ள முயற்சித்துள்ள நிலையில் அதனை முறியடித்த படையினர் பயங்கராவதிகள் 10 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் மீது குறிவைக்கப்பட்டடு நடத்தப்பட்ட தாக்குதல்களில் தற்போது வரை 840 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்த புள்ளி விபரங்கள் 60 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் தாக்குதல்களின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Photography by : Reuters file photo
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM