பரந்துபட்ட கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நலன்சார்ந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சஜித் பிரேமதாசவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையை யடுத்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலேயே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் சமீபகாலமாக நல்லுறவுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றோம். இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து பிரமாண்டமான கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கமானது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் புதிய கூட்டணி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு பல தீர்மானங்களை எடுத்துள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம். ஐ.தே.க.வின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பதுடன் பாராளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து செயற்படவேண்டும் என்ற செயற்குழுவின் தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
கூட்டணியின் தலைவராக சஜித் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராகவும் வேட்பாளர் தெரிவுக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதடன் செயலாளராக மத்தும பண்டாரவை நியமிக்கும் தீர்மானத்தையும் நாம் வரவேற்கின்றோம்.
அந்த அடிப்படையில் புதிய கூட்டணியை பரந்துபட்டதாக மாற்றி மக்கள் நலன்சார்ந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட உடன்படுகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM