மெதகம மற்றும் குருணாகல் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெதகம
மெதகம பகுதியில் மொனராகலை - பிபில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பிபில 15ஆம் கட்டைக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று கெப் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அமுனேகதுர - பகினிவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்குக் காரணமான கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குருணாகல்
குருணாகல் தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் தேசிய வைத்தியசாலைக்கு முன்னுள்ள வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டியொன்று அதற்கு முன்னால் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வீதியின் நடுவில் விழுந்ததையடுத்து லொறியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
குருணாகல் - மல்லவப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM