மட்டு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலம் மீட்பு - உயிரிழந்தவரின் மைத்துனர் கைது 

Published By: Digital Desk 4

12 Feb, 2020 | 02:12 PM
image

மட்டக்களப்பு புனானை ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் கடந்த மாதம் 31 ஆம் திகதி  மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட உயிரிழந்தவரின் மைத்துனரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி புனானை ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஒமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வானம் பிரசாந்தன் என்பவர் சடலமாக மீட்டகப்பட்டுள்ளதுடன் குறித்த சடலத்தின் அருகே உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது 

குறித்த நபர் கடந்த 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் துப்பாக்கி  சூட்டு காயத்துடன் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரி மரணச் சான்றிதழை பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்தவரின் மனையியின் சகோதரியின் கணவரான 31 வயதுடைய சொக்கலிங்கம் கோடீஸ்வரன்; என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். 

ஜனவரி 26 ஆம் திகதி இரவு ஓமனியாமடுவிலுள்ள மைத்துனரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்தியுள்ளதுடன் அங்கு எவரும் இல்லை எனவும் அந்த வீட்டின் நிலத்தில் இரத்தம்; உறைந்து காணப்பட்டதுடன் இருவருக்கும் இடையில் ஏற்கனவே முரண்பாடு உள்ளதாகவும். இருவர்களின் குடும்பங்கள் வாழைச்சேனையில் வசித்துவருவதாகலும். பொலிசாரின் விசாரனையில் தெரியவந்துள்ளது  

இதனையடுத்து பொலிஸ் தடயவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு மைத்துனரின் வீட்டின் நிலத்தில் உறைந்திருந்த இரத்த மாதிரியையும் உயிரிழந்தவரின் இரத்தத்தையும் எடுத்து  பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02